சிறையில் மயங்கி விழுந்த இளவரசி!! – உச்சக்கட்ட மோதலில் சசிகலா குடும்பம்
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, தினகரன் மட்டுமே சந்தித்து வழக்கு குறித்து பேசிவருகிறார்.
´ஆட்சி அதிகாரத்திற்குள் தினகரன் கோலோச்சுவதை சசிகலா உறவுகள் ரசிக்கவில்லை.
அதன் விளைவாகவே சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை உறவுகள் புறக்கணிக்கின்றனர் ´ என்று போயஸ் கார்டன் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை சசிகலாவுக்கு விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் கடந்த பெப்ரவரி 15-ம் திகதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் சிறைப்பட்டனர். அவர் சிறை சென்ற மறுநாளே முதலமைச்சகராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 25 நாட்களாக சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்குத் தேவையான உடை, மருந்துகளை கார்டனில் உள்ளவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
“ஆனால், சசிகலாவின் உறவினர்கள் யாரையும் பெங்களூரு சிறைப் பக்கம் பார்க்க முடிவதில்லை.
அவர் சிறைக்குச் சென்ற முதல்நாளில் மட்டும் ம.நடராசன், டாக்டர்.வெங்கடேஷ் ஆகியோர் பார்க்கச் சென்றனர்.
அதன்பிறகு, அவரைப் பார்க்க ஒருவரும் செல்லவில்லை. திவாகரன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை” என ஆதங்கத்தோடு பேசினார் கார்டன் உதவியாளர் ஒருவர்,
“இதுவரையில் இரண்டு முறை சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார் டி.டி.வி.தினகரன். முதல்முறை செல்லும்போது வழக்கு தொடர்பாக விவாதிப்பதற்காக வழக்கறிஞர்களுடன் சென்றார்.
அப்போது சசிகலாவிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்கினார். அவரிடம் சிறை நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார் தினகரன்.
அடுத்தமுறை, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய விளக்கம் குறித்து தெரிவிப்பதற்காகச் சென்றார். அப்போது அவருடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் உடன் சென்றார்.
இந்த சந்திப்பில் குடும்ப உறவுகளின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்துப் பேசினார் தினகரன்.
அவர் எடுத்துக் கூறிய சில விஷயங்களைக் கேட்ட சசிகலா, என்ன செய்வது எனத் தெரியாமல் கண்கலங்கினார்.
அவரை ஆறுதல்படுத்திவிட்டு சென்னை வந்தார் தினகரன். இந்த சந்திப்பிற்குப் பிறகு தினகரனுக்கு எதிராகக் கொந்தளித்தார் தீபக்.
´பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும். தினகரன் தலைமையை ஏற்க முடியாது´ எனவும் சீறினார்.
இதன் பின்னணியில் ம.நடராசன் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது.
தீபக்கை சமாதானப்படுத்தும் வேலையில் கார்டனில் உள்ளவர்கள் இறங்கினார்கள். அன்றிலிருந்து இன்று வரை தீபக் எங்கே போனார் என்றும் தெரியவில்லை.
சிறைக்குச் செல்வதற்கு முன்பு வரையில் இளவரசிக்கு ரத்தக் கொதிப்பு இல்லை. சிறைக்குச் சென்ற நாளில் இருந்தே அவருக்கு ரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. இரண்டு முறை சிறையில் மயங்கி விழுந்துவிட்டார்.
சசிகலா அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், பாஸ்கரன், திவாகரன், சுந்தரவதனத்தின் உறவுகள் என ஒருவர்கூட சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை.
இவர்களை எல்லாம் வர வேண்டாம் என்று சசிகலா சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. தினகரனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான், இந்தப் புறக்கணிப்புக்கு ஒரே காரணம்.
இவர்களைவிட, இன்னும் பரிதாபத்திற்குரியவராக இருக்கிறார் சுதாகரன். அவரது மனைவி, பிள்ளைகள்கூட அவரை சந்திக்க வரவில்லை.
அரைக்கால் ட்ராயரைப் போட்டுக் கொண்டு சிறைக்குள் வலம் வருகிறார்.
நாள்தோறும் வாக்கிங் போனாலும், சசிகலாவை பாதித்துள்ள சர்க்கரையின் அளவும் குறையவில்லை. அவருக்குத் தேவையான மாத்திரைகளை விவேக் ஜெயராமன் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார்.
தினகரனை ஓரம்கட்டும் வரையில் குடும்ப உறவுகளின் கோபம் தணிய வாய்ப்பில்லை” என்கிறார் அ.தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர்.
ஜெயலலிதா இருந்தவரையில் ஆட்சி அதிகாரத்தின் மறைவில் நின்று கொண்டே காரியம் சாதித்த சசிகலாவின் உறவுகள், நேரிடையாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர்.
இவர்களைக் கட்டுப்படுத்தும் வித்தை தெரியாமல் சிறை நாட்களை எண்ணிக் கொண்டு வருகிறார் சசிகலா.
No comments:
Post a Comment