Sunday, 19 March 2017

ரஞ்சித் இது என் கடைசிப் படம் காப்பாத்துங்க- 

ரஜினி : மக்களின் அன்பை இழந்த பரிதாபம்



ரஜினிகாந்த்-பா.ரஞ்சித்தின் கூட்டணி ஒருவழியாக உறுதியாகி சூட்டிங் கிளம்ப ஆயத்தமாகி விட்டனர்.
கபாலி படத்தின் மொத்த லாபத்தையும் கலைப்புலி தாணுவே அனுபவித்தார் என்கிற பேச்சு  கிளம்பியது.
இதனால் இம்முறை மருமகன் தனுஷ் மாமா நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே தனுஷ் சுசித்ரா பிரச்சனையில் சிக்கி சின்னா பின்னாமாகியுள்ளார்.
ரஜினியும் தமிழக மக்கள் பிரச்சனைக்கு உருப்படியாய் ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை.
ஆனால், மோடி அறிவிக்கும் திட்டங்களுக்கு முதல் ஆளாய் குரல் கொடுக்கிறார். காவிரி,ஜல்லிக்கட்டு,மழைவெள்ளம்,பணத் தட்டுப்பாடு என சிக்கல் மேல் சிக்கலாக தமிழன் அவதி படும் போதெல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தார்.
இதனால் சமூகவலைத் தளங்களில் ரஜினிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. மூத்தமகள் ஐஸ்வர்யா ஐநா சபையில் பரதம் ஆடியதாகச் சொல்லி நடந்த கூத்துக்களும் நாடே சிரித்தது.
கண்டனங்களும் எழுந்தது. இளையமகள் சவுந்தர்யா குடித்துவிட்டு கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினார். இப்படி அடிமேல் அடைபட்டிருக்கும் நிலையில் ரஜினி மிகவும் மனம் சோர்ந்து போய் இருந்தார்.
ஆனால் மருமகனுக்கும் இயக்குனர் ரஞ்சித்துக்கு கொடுத்த வாக்கால் கடைசியாக ஒரு வெற்றி படம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதே அவர் எண்ணமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் விவரம்  அறிந்தவர்கள்.
வயதான காலத்தில் பாவம் கஷ்டந்தான்..!?

நன்றி : லைவ்டே

1 comment:

vas said...

Pesaama 2.0 voda niruthikalame