Monday, 20 March 2017

விவசாயிகளுக்காக பேசாத அமைச்சர், சினிமாகாரர்களுக்காக மட்டும் பேசுவது ஏன்?

Want create site? Find Free WordPress Themes and plugins.
கடந்த ஏழு நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறித்து எதுவும் பேசாத மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இளையராஜா, எஸ்.பி.பி பிரச்சனைக்கு மட்டும் கருத்து தெரிவித்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இளையராஜா, எஸ்.பி.பி இடையே நடந்து வரும் காப்புரிமை பிரச்சனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். அதில், இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனை பேசி நல்ல விதமாக சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், டெல்லியில் ஏழு நாட்களாக விவசாயிகள் குளிரிலும், வெயிலிலும், அரை நிர்வாண போராட்டம் நடத்தி வந்த போது கருத்து தெரிவிக்காத அமைச்சர் வெங்கையா நாயுடு, இளையராஜா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
thanks : liveday

No comments: