Friday, 3 March 2017

தலைவலியில் ஏற்படும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!



தலைவலிக்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. அதாவது, குளித்துவிட்டு முழுமையாக தலை துவட்டாமல் இருந்தால் வரும்; அதிக நேரம் கணினி பார்த்தால் வரும்; ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருந்தால் வரும்; மனக்குழப்பங்கள் இருந்தால் வரும்.
அதே நேரத்தில் நாள்பட்ட தலைவலி பிரச்சனைகள் இருந்தால், அதற்கு உடல் ரீதியான வேறு சில காரணங்களும் இருக்கும். அதனால், அதை நாம் அலட்சியமாக விட்டுவிடக்கூடாது.
ஏனெனில், இந்த வலியானது, மூளையில் கட்டி, மூளைக் கசிவு மற்றும் மூளைக்காய்ச்சல் இது போன்ற நோய்களின் அறிகுறியாக கூட இருக்க அதிக வாய்ப்பிருக்கின்றது.
அதுமட்டுமின்றி, நாளடைவில் இந்த வலியானது தீவிர தலைவலிக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
தலைவலிக்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. அதாவது, குளித்துவிட்டு முழுமையாக தலை துவட்டாமல் இருந்தால் வரும்; அதிக நேரம் கணினி பார்த்தால் வரும்; ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருந்தால் வரும்; மனக்குழப்பங்கள் இருந்தால் வரும்.
மேலும், இது குறித்து ஒருசில ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் அதை தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
1.நாம் உட்காரும் போது, நமது கழுத்தின் பின் பகுதி மற்றும் முதுகுத்தண்டுப் பகுதியில் கடுமையான வலியை உணரக் கூடும்.
2.அதிக தலைவலி மற்றும் இடுப்பு வலி காரணமாக சில நேரங்களில் வாந்தி மற்றும் வயிற்று குமட்டல் போன்ற பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்தும்.
3.தலைவலி அதிகமாக இருப்பதால், சிலருக்கு கடுமையான காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

No comments: