பட்டினியோடு போராடிய விவசாயிகள்! பசி தீர்த்த இளைஞர்கள்! தமிழன்டா!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் நீர்நிலைகள் எல்லாம் வற்றி போனது. விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக விவசாயிகள் பயிர்க்கடன்களை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த துயர சம்பவம் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், வறட்சி நிவாரணம் கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தை விவசாயிகள் சங்கங்கள், தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 4 நாட்களாக நடு ரோட்டில் கொட்டும் பனியிலும், அடிக்கும் வெயிலும், அரை நிர்வாண கோலத்திலும், நாமம் பூசிக்கொண்டும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த தமிழ் இளைஞர்கள், பசி, பட்டினியோடு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு உணவு சமைத்து கொண்டு வந்து அன்போடு பரிமாறினர்.
தமிழக இளைஞர்களின் இத்தகைய செயல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நெகிழ செய்திருக்கிறது.
No comments:
Post a Comment