Thursday, 23 March 2017

காணாமல் போன ஏரி! கண்டுபிடித்து கொடுத்த கலெக்டர்! குவியும் பாராட்டுக்கள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளங்கள் தூர்வாராமலும், மராமத்துப் பணிகள் நடைபெறாமலும் தூர்ந்து போய்விட்டது. மேலும் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுவதால் நீராதாரங்கள் முற்றிலும் அழிந்து வருகின்றன.
அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் அருகே மருக்காலங்குறிச்சி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மங்களா ஏரி. இந்த ஏரியை காணவில்லை என்று கடந்த வருடம் அரியலூர் கலெக்டரிடம் அந்த ஊர் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார் கலெக்டர் சரவணவேல்ராஜ். மேலும் அவரே முன்னின்று ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் கூறுகையில், மங்களா ஏரி 18 ஏக்கள் பரப்பரளவு கொண்டது. இந்த ஏரியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்றது.
இருபோகம் விவசாயம் செய்து இப்பகுதி மக்கள் செழிப்பாக இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் இந்த ஏரியை தூர்வாரி 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இதனால் ஏரி தூர்ந்து தரைமட்டமாகி விட்டது. அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலர் ஏரியை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக மாற்றி வீடு கட்டவும் தொடங்கிவிட்டனர்.
இதனை எதிர்த்து நாங்கள் போலீசில் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் உங்களால் எங்களை ஒன்று செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனால் நாங்கள் கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் எங்கள் பகுதியில் ஏரியை காணவில்லை என்று புகார் அளித்தோம். இதனை தொடர்ந்து விரைந்து நடவடிக்கையில் இறங்கி கலெக்டர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் இதை விசாரிக்க குழு ஒன்றையும் நியமித்தார். அந்த குழு விசாரித்ததில் 6 ஏக்கருக்கு மேல் ஏரியை ஆக்கிரமித்திருந்தது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பாளர்களை அழைத்த கலெக்டர் உங்கள் மீது இப்போதே நடவடிக்கை எடுக்க முடியும் இருந்தாலும் உங்களுக்கு 6 மாதம் அவகாசம் தருகிறேன். நீங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட வேண்டும் என்ற
இந்நிலையில் நேற்று தண்ணீர் தினம் என்பதால் கலெக்டரின் நேரடி பார்வையில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, ஏரியை தூர்வாரவும் உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்துள்ளனர். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ்க்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நனறி : லைவ்டே

No comments: