Tuesday, 21 March 2017

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வில்லன் பெண்களை பற்றி சொல்லுவது உண்மையா?

Want create site? Find Free WordPress Themes and plugins.
அக்சய் குமார் இன்றைக்கு தமிழர்களுக்கு மிக தெரிந்த நபராகிவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக 2.0 வில் நடிக்கிறார் என்றால் சும்மாவா?
அக்சய் தற்போது டாப்சியுடன், அதாங்க, ஆடுகளம் ஹீரோயினுடன்”நாம் ஷபானா” என்ற படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீசாக போவதால் ப்ரோமோஷனல் வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் இந்தியன் உளவாளியாக நடித்துள்ளார் டாப்ஸி. இதில் அக்சய் சின்ன ரோல் தான் வருகிறார். ஆனால், இம்பாக்ட்டான ரோல்.
இந்த படம் பற்றி பேசும்போது,’ உலக பிரபலம் வாய்ந்த சிஐஏ , மொசாட் எல்லாம் நம்ம பெண்களின் உளவுக்கு முன்ன நிக்க முடியாது. இயற்கையிலேயே அவர்களுக்கு ஆராயும் தன்மை அதிகம். ஆண்கள் கேஜெட்டுகளில் சூப்பரா இருப்பாங்க.
பெண்கள் உள்ளேயே ஒரு ஆண்டனா வைத்துள்ளார்கள். டாப்சிக்கும் இருக்கு. எப்படித்தான் அவுங்க கண்டுபிடிக்கிறாங்கன்னு தெரியாது. ஆனால், கண்டுபிடிக்கிறாங்க. அதனால், மனைவிகளிடம் சண்டை மட்டும் போடாதீங்க. அப்புறம், எல்லாத்தையும் அவுங்க தெரிஞ்சிப்பாங்க.” என்று சொல்லியுள்ளார்.

No comments: