Tuesday, 7 March 2017

குஷ்டத்தை போக்குவதற்கான பரிகாரங்கள்; யோகினி ஏகாதசி – ஆன்மிக சிந்தனைகள்



குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்டவன் ஹேமமாலி. இந்நிலையில், ஒரு நாள் மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், அவனால் குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போக முடியவில்லை.
பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். “தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்” சாபம் விட்டான்.
ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன், மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்து, பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.
அவர் “யோகினி ஏகாதசி”யை அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகா விஷ்ணுவை பூஜித்த ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான். ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி இது என்று கூறப்படுகின்றது.

No comments: