“எவ்வளவு திமிர் இருந்தா பொம்பளைங்க ரோட்டுக்கு வந்து போராடுவீங்க!”
கடல் புரட்சி!
நாக்கூசும் கெட்ட வார்த்தைகள் என்ற நரக ஆயுதங்களோடு, வீடு வீடாகப் புகுந்து பெண்களைத் தெருவில் இழுத்துப்போட்டு அடித்து உதைத்துள்ளனர் போலீஸார். ‘எவ்வளவு திமிர் இருந்தா பொம்பளைங்க ரோட்டுக்கு வந்து போராடுவீங்க...’ என்று சொல்லிச் சொல்லி பெண்களை அடித்திருக்கிறது போலீஸ். ‘‘கர்ப்பிணி ஒருவரை போலீஸார் எட்டி உதைத்ததில் அந்தப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது’’ என்று பதற்றம் குறையாத வார்த்தைகளில் விவரிக்கிறார்கள் சென்னை சிவராசபுரம் மீனவ மக்கள்.
போராட்டத்தில் இரவும் பகலுமாகப் பங்கேற்ற கீதாஞ்சலி, லிடியா ஆகிய இருவரும் போலீஸாரின் தாக்குதலில் இருந்து தப்பித்து சிவராசபுரம் பகுதி மக்களின் பாதுகாப்பில் இருந்துள்ளனர். போலீஸாரின் தாக்குதல் குறித்துப் பேசும் கீதாஞ்சலி, “விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவி நான். தமிழ் உணர்வால்தான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். கடந்த 23-ம் தேதி காலை மெரினாவில் போலீஸ் நிகழ்த்திய வன்முறையில், அடி தாங்கமுடியாமல் பலரும் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். நான், லிடியா மற்றும் வேறு ஒரு பெண். அவருடைய பெயர் தெரியவில்லை. மூன்று பேரும் கைகளைக் கோத்துக்கொண்டு விவேகானந்தர் இல்லத்தின் அருகே நின்றோம்.
‘நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம்’ என்றபோது போலீஸார், எங்கள் மூன்று பேரையும் தரதரவென்று இழுத்துச் சென்றனர். பெண் போலீஸார் இல்லை. ஆண்கள்தான். வரைமுறை எதுவும் இல்லாமல் அரக்கத்தனமாக எங்களை இழுத்துச் சென்றனர். எங்கெல்லாம் தொடக்கூடாதோ, அங்கெல்லாம் கை வைத்தனர். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வெட்கப்பட வேண்டியது எங்கள் மீது கைவைத்து வீரத்தைக் காட்டிய அந்த போலீஸார்தான். வர மறுத்ததால் லத்தியால் எங்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர்.
போராட்டத்தில் இரவும் பகலுமாகப் பங்கேற்ற கீதாஞ்சலி, லிடியா ஆகிய இருவரும் போலீஸாரின் தாக்குதலில் இருந்து தப்பித்து சிவராசபுரம் பகுதி மக்களின் பாதுகாப்பில் இருந்துள்ளனர். போலீஸாரின் தாக்குதல் குறித்துப் பேசும் கீதாஞ்சலி, “விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவி நான். தமிழ் உணர்வால்தான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். கடந்த 23-ம் தேதி காலை மெரினாவில் போலீஸ் நிகழ்த்திய வன்முறையில், அடி தாங்கமுடியாமல் பலரும் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். நான், லிடியா மற்றும் வேறு ஒரு பெண். அவருடைய பெயர் தெரியவில்லை. மூன்று பேரும் கைகளைக் கோத்துக்கொண்டு விவேகானந்தர் இல்லத்தின் அருகே நின்றோம்.
‘நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம்’ என்றபோது போலீஸார், எங்கள் மூன்று பேரையும் தரதரவென்று இழுத்துச் சென்றனர். பெண் போலீஸார் இல்லை. ஆண்கள்தான். வரைமுறை எதுவும் இல்லாமல் அரக்கத்தனமாக எங்களை இழுத்துச் சென்றனர். எங்கெல்லாம் தொடக்கூடாதோ, அங்கெல்லாம் கை வைத்தனர். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வெட்கப்பட வேண்டியது எங்கள் மீது கைவைத்து வீரத்தைக் காட்டிய அந்த போலீஸார்தான். வர மறுத்ததால் லத்தியால் எங்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர்.
அடிபட்டதில் எனக்குக் கை வீங்கியது. வலியால் துடித்து அழுதேன். இதைக்கண்ட சில பத்திரிகை புகைப்படக்காரர்கள் எங்களைப் படம் பிடிக்க நெருங்கி வந்தார்கள். உடனே எங்களை விட்டு விட்டு அவர்களைப் போலீஸார் தாக்கினர். அந்த இடைவெளியில் நானும் லிடியாவும் சிவராசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து விட்டோம். மற்றொரு பெண் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
எங்களைப் பாதுகாத்து, அவர்கள் உணவு கொடுத்தனர். உணவில் கை வைக்கும்போது... வீட்டுக்குள் புகுந்த போலீஸார், தட்டைப் பிடுங்கி வீசிவிட்டு எங்களை மீண்டும் இழுத்துச் சென்றனர். அந்தப் பகுதி மக்கள் சூழ்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அதைமீறி எங்களை மீட்டு, ஒரு வீட்டுக்குள் வைத்துப்பூட்டினர் மக்கள். அந்த வீட்டையும் போலீஸார் உடைத்து நாசமாக்கினர். அங்கும் எங்களைத் துரத்தித்துரத்தி அடித்தனர். ‘பொம்பளப் பிள்ளைங்க அடங்கி வீட்டில் இருக்காம வீதிக்கு வருவீங்களா?’ என்று கேட்டு, மிக அசிங்கமாகத் திட்டினார்கள். எங்களைப் பாதுகாத்து நின்ற பெண்கள் பலரையும் சரமாரியாகத் தாக்கினார்கள். நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம் என்றால், சிவராசபுரம் மக்கள் பாதுகாப்பு கொடுத்ததால்தான்” என்று கலங்கினார்.
எங்களைப் பாதுகாத்து, அவர்கள் உணவு கொடுத்தனர். உணவில் கை வைக்கும்போது... வீட்டுக்குள் புகுந்த போலீஸார், தட்டைப் பிடுங்கி வீசிவிட்டு எங்களை மீண்டும் இழுத்துச் சென்றனர். அந்தப் பகுதி மக்கள் சூழ்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அதைமீறி எங்களை மீட்டு, ஒரு வீட்டுக்குள் வைத்துப்பூட்டினர் மக்கள். அந்த வீட்டையும் போலீஸார் உடைத்து நாசமாக்கினர். அங்கும் எங்களைத் துரத்தித்துரத்தி அடித்தனர். ‘பொம்பளப் பிள்ளைங்க அடங்கி வீட்டில் இருக்காம வீதிக்கு வருவீங்களா?’ என்று கேட்டு, மிக அசிங்கமாகத் திட்டினார்கள். எங்களைப் பாதுகாத்து நின்ற பெண்கள் பலரையும் சரமாரியாகத் தாக்கினார்கள். நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம் என்றால், சிவராசபுரம் மக்கள் பாதுகாப்பு கொடுத்ததால்தான்” என்று கலங்கினார்.
அழுதுகொண்டே நம்மிடம் பேசிய லிடியா, ‘‘நாங்கள் மூன்று பேரும் கைகோத்துக்கொண்டு, ‘இங்கிருந்து போக மாட்டோம்’ என்று சொன்னது அவ்வளவு பெரிய குற்றமா? அப்படியே தரதரவென விவேகானந்தர் இல்லத்தில் இருந்து இழுத்து வந்தார்கள். வலியில் கதறினோம். அணிந்திருந்த ஆடைகளையும் சேர்த்து இழுத்தனர். சொல்வதற்கு மிக வேதனையாக உள்ளது, அடி வயிற்றில் லத்தியை வைத்துக் குத்தினார்கள்” என்று கதறினார்.
சிவராசபுரத்துக்கு அருகே வசித்து வருபவர் பிரியா. இவரும் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளானவர். அவரிடம் பேசியபோது, ‘‘போராட்டக்காரர்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். கண்ணீர்ப்புகை குண்டுகளைப் போலீஸார் வீசினர். அப்போது நானும் எனது மாமாவும் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். திபுதிபுவென்று உள்ளே நுழைந்த போலீஸார் அடுப்பில் வெந்து கொண்டிருந்த இட்லி பாத்திரத்தை எட்டி உதைத்துவிட்டு, சமையலறையில் இருந்த பாத்திரங்களை எல்லாம் உடைத்தனர். சத்தம் கேட்டு என் மாமாவும் நண்பரும் ஓடிவந்தனர். போலீஸார் அவர்களையும் தாக்கினர். வலி தாங்கமுடியாமல் அவர்கள் கதறினார்கள். ‘அவர்களை ஏன் அடிக்கிறீர்கள்? இது எங்க வீடுதான்’ என்று நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், போலீஸ்காரர் ஒருவர் என்னையும் லத்தியால் கடுமையாக அடித்தார். கறுப்பு நிற உடையில் இருந்ததால், என்னையும் போராட்டக்காரராக நினைத்துவிட்டார்போல! மயக்கம் வருவதுபோல இருக்க, அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன். விடாமல் கையைப் பிடித்து இழுத்து, லத்தியால் தாக்கினர். வலி தாங்க முடியாமல் அலறினேன். எங்களுடைய உறவினர்கள் எல்லோரும் ஓடிவரவே, எங்களை விட்டுவிட்டுப் போனார்கள்” என்று கலக்கத்தோடு சொன்னார்.
‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்ற வாசகத்தோடு தங்களைக் கடந்துபோகும் வாகனங்களைக் கண்டாலே நடுநடுங்கிப் போகிறார்கள் இம்மக்கள்!
சிவராசபுரத்துக்கு அருகே வசித்து வருபவர் பிரியா. இவரும் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளானவர். அவரிடம் பேசியபோது, ‘‘போராட்டக்காரர்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். கண்ணீர்ப்புகை குண்டுகளைப் போலீஸார் வீசினர். அப்போது நானும் எனது மாமாவும் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். திபுதிபுவென்று உள்ளே நுழைந்த போலீஸார் அடுப்பில் வெந்து கொண்டிருந்த இட்லி பாத்திரத்தை எட்டி உதைத்துவிட்டு, சமையலறையில் இருந்த பாத்திரங்களை எல்லாம் உடைத்தனர். சத்தம் கேட்டு என் மாமாவும் நண்பரும் ஓடிவந்தனர். போலீஸார் அவர்களையும் தாக்கினர். வலி தாங்கமுடியாமல் அவர்கள் கதறினார்கள். ‘அவர்களை ஏன் அடிக்கிறீர்கள்? இது எங்க வீடுதான்’ என்று நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், போலீஸ்காரர் ஒருவர் என்னையும் லத்தியால் கடுமையாக அடித்தார். கறுப்பு நிற உடையில் இருந்ததால், என்னையும் போராட்டக்காரராக நினைத்துவிட்டார்போல! மயக்கம் வருவதுபோல இருக்க, அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன். விடாமல் கையைப் பிடித்து இழுத்து, லத்தியால் தாக்கினர். வலி தாங்க முடியாமல் அலறினேன். எங்களுடைய உறவினர்கள் எல்லோரும் ஓடிவரவே, எங்களை விட்டுவிட்டுப் போனார்கள்” என்று கலக்கத்தோடு சொன்னார்.
‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்ற வாசகத்தோடு தங்களைக் கடந்துபோகும் வாகனங்களைக் கண்டாலே நடுநடுங்கிப் போகிறார்கள் இம்மக்கள்!
நன்றி
விகடன்
No comments:
Post a Comment