‘‘தவறு செய்தவர்களை தட்டி கேட்டதால், என் மீது பழி போடுகிறார்கள்’’ ஜக்கி வாசுதேவ் பதிலடி!

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 24ம் தேதி ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் நேற்று தமிழக அரசு, ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈஷா மையத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு வாதிட்டது.
இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘ஈஷா யோகா மையத்துக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூட, நான் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்கிறேன்’, என்று கூறியுள்ளார்.
மேலும், பல அமைப்புகள் அவர்களுக்கான ஒரு குறிப்பிட்ட கொள்கைகளுடன் இயங்குகிறார்கள். அவர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களாக காட்டிக் கொள்கிறார்கள்.
அவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்து வந்த நடவடிக்கைகளை நிறுத்தினேன். அதனால் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி என் மீது பழி போட பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : லைவ்டே
No comments:
Post a Comment