Friday, 3 March 2017

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு பலன் கிடைக்கும் என்பது பற்றி சிறிய கண்ணோட்டம்

http://thakavalpakkam.blogspot.in

article image

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது என்று வேதங்கள் சொல்வது மறுக்க முடியாத ஒன்று, அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை எத்த‍னை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்பது விரிவாக ஆன்மீக மலர்.காம் வழங்குவதில் மகிழ்ச்சியளிக்கிறது. 

பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறைக்கு. 

புனித‌நதிகளில் நீராடுதல் - 3 தலைமுறைக்கு 

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் - 5 தலைமுறைக்கு. 

அன்னதானம் செய்தல் - 3 தலைமுறைக்கு. 

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் - 5 தலைமுறைக்கு. 

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது - 6 தலைமுறைக்கு. 

திருக்கோயில் புனர்நிர்மாணம் - 7 தலைமுறைக்கு. 

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் - 9 தலைமுறைக்கு. 

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது - 14 தலைமுறைக்கு. 

முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் - 21 தலைமுறைக்கு. 

நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம் 

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும். 

நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.

No comments: