Friday, 31 March 2017

சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருதுகள்: தெறி, இறுதிசுற்று படத்துக்கு 3 விருதுகள்



ஜியோ பிரைம் - பாரதி ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல்: எது சிறந்தது?

5 கதாபாத்திரத்தில் ரஜினி, 12 லுக்கில் அக்ஷய்குமார்: எதிர்பார்ப்பை அதிகமாக்கும் 2.0



`2.0' படத்தில் முக்கிய பணிகள் நிறைவால் ஷங்கர் எடுக்கும் அதிரடி முடிவு.




பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை






பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பரிட்சை ரிசல்ட் வந்தவுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.

உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா?… அப்ப இதோ இதப்படிங்க…



உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா?… அப்ப இதோ இதப்படிங்க…


















என்னதான் சருமத்தைப் பாதுகாத்து வந்தாலும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிவது குறையவே குறையாது. அது கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.

அதோடு, காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நிறைய தண்ணீர் குடித்தால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.



முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை.

டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறட்சி அடையச்செய்து சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகத்தை கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள். முகம் கழுவ ஜான்சன் அண்ட் ஜான்சன், க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும்.

மேலும் களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஆயில் அதிகம் சுரப்பவர்கள் ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது.
எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம் நடிகர் விஷால் ஆவேசம்

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம் நடிகர் விஷால் ஆவேசம்

சென்னை

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடந்தது.

தென்னிந்திய நடிகர்  சங்கத்திற்கு என்று தனியாக கட்டடம் எதுவும் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வாகத்தின் பொறுப்புக்கு வந்து நடிகர் சங்கம் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதன்படி, தி.நகர், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் முதலில் மீட்கப்பட்டது. பின்னர் அங்கு கட்டடம் கட்ட உரிய அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து இன்று நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை ஆரம்பமானது. நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் பூஜைகள் ஆரம்பமாகி தொடந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம், சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியதாவது:-

அளிக்கிறோம்2018 செப்டம்பரில் நடிகர் சங்க புதிய கட்டடம் திறக்கப்படும்.நடிகர் சங்க புதிய கட்டடத்தால் நலிந்த கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது ஏறி மிதித்து போய்க்கொண்டே இருப்போம்.அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிற்பகலில் நடிகர்கள் ரஜினி, கமல் வருகிறார்கள்.நடிகர் சங்கம் கட்டடம் கட்ட நானும், கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜயகுமார் பேசியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா : மூத்த உறுப்பினர்களுடன் பணியாற்றும், இளைஞர்களின் முயற்சி வீண்போகாது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் நிச்சயம் வெற்றி பெறுவார். என கூறினார்.

Thursday, 30 March 2017

செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை

செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை

செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் 
போலீசாரிடம் சிக்கினார். ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர்.
நகரி, 
செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் 
போலீசாரிடம் சிக்கினார். ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர்.
செம்மரக்கடத்தல் ராணி

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை உயர்ந்த 
செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி 
செல்கிறார்கள். அவர்களை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கைகளை 
மேற்கொண்டு வருகிறது.
செம்மரக்கடத்தல் தொடர்பாக கடந்த 2015–ம் ஆண்டு பர்மாவை சேர்ந்த 
சர்வதேச கடத்தல் மன்னன் லட்சுமணன் என்பவரை சித்தூர் போலீசார் 
கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் 
அடைத்தனர்.
கைதான லட்சுமணனின் காதலி சங்கீதா சட்டர்ஜி (வயது 26). இவர் விமான 
பணிப்பெண்ணாக பணியாற்றியவர். அவரை லட்சுமணன் 2–வது திருமணம் 
செய்ததாகவும் கூறப்படுகிறது.
செம்மரக்கடத்தலில் போலீசாரிடம் லட்சுமணன் சிக்கியதால் சங்கீதா 
சட்டர்ஜி தனது கணவரின் தொழிலான செம்மரக்கடத்தலில் ஈடுபட்டார். 
அவர் செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்து வந்தார். பலரை 
துப்பாக்கியால் மிரட்டி செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு 
கோடிகோடியாக பணம் சம்பாதித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் அவரை கைது செய்ய ஆந்திர போலீசார் 
தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
வங்கி லாக்கர் முடக்கம்

அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், 
சங்கீதா சட்டர்ஜியை முன்ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று 30–க்கும் 
மேற்பட்ட வக்கீல்கள் கொல்கத்தா கோர்ட்டில் மனு செய்தனர். இதைத்தொடர்ந்து 
கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதனால் அவரை கைது செய்ய 
முடியாமல் ஆந்திர போலீசார் திணறினர்.
ஆனாலும் போலீசார் அவரது வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை 
முடக்கினர். வங்கி லாக்கரை போலீசார் சோதனை போட்டபோது அதில் 
இருந்த பலகோடி மதிப்புள்ள தங்கநகைகள், போலி துப்பாக்கி லைசென்சு, 
லேப்–டாப், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் 
அதன்பின்னரும் சங்கீதா சட்டர்ஜி செம்மரக்கடத்தல் தொழிலில் 
மும்முரமாக ஈடுபட்டு வந்தார். முன்ஜாமீன் முடிந்த பின்னரும் அவர் 
சரண் அடையாமல் இருந்து வந்தார்.
கொல்கத்தாவில் சிக்கினார்

இதைத்தொடர்ந்து ஆந்திர போலீசார் விமான பணிப்பெண் சங்கீதா 
சட்டர்ஜியை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது அவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் இருப்பது 
தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சித்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு 
கிரிதர் தலைமையில் தனி போலீஸ் படையினர் கொல்கத்தா சென்று 
சங்கீதா சட்டர்ஜியை கைது செய்தனர். அவரது வீட்டை போலீசார் 
சோதனை நடத்தி அங்கு இருந்த கோடிக்கணக்கான சொத்து பத்திரங்கள் 
மற்றும் போலி துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்

சங்கீதாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் நேற்று முன்தினம் 
நள்ளிரவில் சித்தூருக்கு கொண்டு வந்தனர். அவரை போலீசார் நேற்று 
சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் நீதிமன்ற 
காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் 
ஜெயிலில் அடைக்கப்பட்டார்
.

பாரம்பரிய நெல் வகை – உவர்முண்டான்

தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதி மண்ணுக்கேற்ப பாரம்பரிய நெல் ரகங்களும் காலங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் உவர் தன்மைகொண்ட நிலங்களிலும் கடலோர உவர்ப்பு நிலங்களிலும் நம் முன்னோரால் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகம் உவர்முண்டான்.
Courtesy: Hindu
நேரடி விதைப்பு
டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது மற்றப் பகுதி உவர் நிலங்களில் சாகுபடி செய்யும் நெல் வகை இது. சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நூற்றி முப்பது நாள் வயதுடையது. நான்கடிவரை வளரும், சாயும் தன்மை அற்றது. நடவு செய்வதைவிட புழுதி அடித்து நேரடி விதைப்பு செய்வதற்கு ஏற்ற ரகம்.
நிலத்தில் ஆடு, மாடு கிடை அமைத்தல், தொழு உரம் பயன்படுத்துவது அவசியம். நோய், பூச்சி தாக்குதல் முற்றிலும் இருக்காது. ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் சாயும் தன்மைகொண்டு மகசூல் பாதிக்கப்படும்.
வீரியமான நெல்
உவர் நிலத்தில் சாகுபடி செய்வதால் ஏக்கருக்குப் பதினைந்து மூட்டை எனக் குறைந்த மகசூலே கிடைக்கும். மகசூல் குறைவு என்பதால், இந்த நெல் ரகத்தைச் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவதில்லை. அதேநேரத்தில் உவர் நிலத்தில் குறைந்த மகசூல் கிடைத்தாலும், முளைப்புத் திறனும் வீரியமும் அதிகமுள்ள ரகம்.
மற்றப் பாரம்பரிய ரகங்களைவிட உவர் நிலத்தில் விளையும் உவர்முண்டான் நெல்லுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம். இதன் சாதத்தைச் சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்புசக்தி கூடும். பலவீனப்பட்ட உடலும் பலமாகும்.
நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 09443320954
நன்றி: ஹிந்து

பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்

“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை… இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு வரை தமிழன் தன் விவசாயத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவந்த  பாரம்பர்ய நெல்வகைகள்.
தமிழனிடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நெல்வகைகள் இருந்தன என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு,  தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தானே காரணம்…” – மிகவும் பொறுப்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன வார்த்தைகள்​ நெல் ஜெயராமனிடம் இருந்து.
திருத்துறைப்பூண்டி தாலுக்கா, கத்திமேட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவரது சேகரிப்பில்  156 வகையான பாரம்பரிய நெல்வகைகள் இருக்கின்றன. இதை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளாகக் கொடுத்து, பாரம்பரியமான இயற்கை விவசாயம் தழைக்க வழி செய்துகொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் கடந்த 10 வருடங்களாக திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆதிரங்கம் நெல் திருவிழா நடந்துவருகிறது.
” நான் நுகர்வோர் அமைப்பின் மாநில விவசாயப் பிரிவில் இயக்குநராக இருந்த சமயம் அது.  2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுக்க  நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை ஆதரித்து, பூம்புகாரில் இருந்து கல்லணை வரை  பிரசாரப் பயணம் செய்தார். அப்போது அவர்கூட நானும் போனேன்.  தலைஞாயிறுக்குப் பக்கம், மடுகூர் கிராமத்தில் பிரசாரத்தில் இருந்தபோது வீரப்ப ராமகிருஷணன் என்கிற ஒரு விவசாயி,  ஒரு துணி முடிச்சு ஒன்றை நம்மாழ்வாரிடம் கொடுத்தார்.
‘கிராமத்து மக்கள் வழியில் சாப்பிடுவதற்கு அவல் கொடுத்திருப்பார்கள்… ‘ என நினைத்து அந்தத் துணி முடிச்சை அவிழ்த்தார். அதற்குள் இருந்தது அவல் அல்ல… காட்டு யானம் என்கிற தமிழனின் பாரம்பரிய நெல். ‘இதுபோல நிறையப் பாரம்பர்ய நெல்கள் விவசாயிகளிடம் இருக்கும். அதை எல்லாம் சேகரிக்க வேண்டும்’ எனச் சொன்னார் அந்த விவசாயி. அப்போதே அந்த வேலையை  என்னிடம் ஒப்படைத்து,  எனது பெயரையும் ‘நெல் ஜெயராமன்’ எனவும் மாற்றினார்  நம்மாழ்வார்.

அந்தப் பிரசாரப் பயணம் கல்லணையில் முடிந்தபோது… சில விவசாயிகள் குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை, கார் நெல், பனங்காட்டு குடவாலை, சிஞ்சினிக்கார்… போன்ற நெல்வகைகளைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்தனர். இப்படி தமிழ் நாடு முழுக்க பயனம் செய்து,  156 வகையான தமிழனின் நெல்வகைகள் இன்று எங்களிடம் இருக்கின்றன”  என்கிற நெல் ஜெயராமன், பூங்காரு பாரம்பர்ய நெல்லுக்கான விதைத் தேர்வு , நேர்த்தி, பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பைச் செய்தததற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் அமைச்சகம், 2015-ம் ஆண்டுக்கான கிரிஸ்தி சம்மான் விருதை அவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது

” ஆதிரங்கம் கிராமத்தில் இன்றைக்கு 10 ஏக்கர் பரப்பளவில் பாரம்பர்ய நெற்பயிர் சாகுபடி நடப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த  நரசிம்மன், ரெங்க நாராயணன் இருவரும் ஆளுக்கு ஐந்து  ஐந்து ஏக்கர் நிலம் தந்து உதவினார்கள். அந்த நிலத்தின் முதல் நடவை நம்மாழ்வார்தான் நட்டுவைத்துத் தொடங்கிவைத்தார். பாரம்பர்ய நெல்லை மீட்டெடுப்பதும், அதற்கு ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதும் என கடந்த 9 ஆண்டுகளாக ஆதிரங்கத்தில் நெல் திருவிழாவை நடத்தி வருகிறோம். இந்தத் திருவிழாவுக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் பாரம்பர்ய நெற்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
ஒருவர் 2 கிலோ நெல்லை வாங்கிக்கொண்டு போனால், அடுத்த முறை அவர் அதை நான்கு கிலோ நெல்லாக திருப்பித் தரவேண்டும். அப்படி வாங்கிக்கொண்டு போகிற விவாசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஏதாவது சந்தேகம் என்றால்,  எங்கள் குழு அவர்களின் சந்தேகத்தை நிவர்த்திச் செய்யும். எங்களது நெல் திருவிழா பற்றி கேள்விபட்ட இன்டர்நேஷனல் உணவு பாதுகாப்பு பிரசாரகர் தேவேந்திர சர்மா, இந்திய அளவிலான உணவு  பாதுகாப்பு பிரசாரகர் கவிதா துர்கந்தி உள்ளிட்டோர் எங்கள் நெல் திருவிழாவில் வந்து கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு திட்டக் கமிஷனின் துணைத் தலைவாரக இருந்த சாந்தா ஷீலா  நாயர் , ‘அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தையும் நீங்க செய்துகொண்டு இருக்கீங்க. இந்த பாரம்பர்ய நெல் விதைகளை 2016 ம் ஆண்டு அரசாங்கம் உங்களிடம் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மான்ய விலையில் அளிக்கும்’ என்று சொல்லி,  அதற்கான ஏற்பாட்டையும் செய்தார்.  ஜூன் மாதம் நடக்க இருக்கும் 10 வது நெல் திருவிழாவில் 156 பாரம்பரிய நெல் விதைகளை 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் இருக்கிறது?” என்கிற நெல் ஜெயராமனிடம் , “பாரம்பர்ய விவசாயம் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நெல் அசுர வேகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையின் பசியைப் போக்கும் அளவுக்கு இருக்காதே?” என்று கேட்டால் அதை மறுக்கிறார்.
” இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட உணவு கிடக்குகளில் முறையாக பராமரிக்கப்படாததன் மூலம், எலிகள் மட்டும் பூச்சிகளால் மட்டும் 22 சதவிதம் உணவுப்பொருள் வீணாகிறது.
திருமண வீடு மற்றும் ட்டல்களில் மட்டும் 14 சதவிகிதம் உணவு வீணாகிறது. இதையெல்லாம் சரிசெய்தாலே இந்தியாவின் உணவு தேவையை வெற்றிகரமாகச் சமாளிக்கலாம். தவிரவும், பாரம்பர்ய விவசாயத்தில் 1 ஏக்கரில் 20 மூட்டை(60கிலோ) நெல்லை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 5 ஆயிரம்தான்.
ஆனால் அதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 25 ஆயிரம் ரூபாய். ஆனால், ரசாயன இடுப் பொருட்கள் கொண்டு 1 ஏக்கரில் 30 மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதற்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய். விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 24 ஆயிரம் ருபாய்தான். இதிலிருந்தே பாரம்பர்யமான விவசாயம்தான் லாபகரமானது என்பது உறுதியாகிறது. பாரம்பர்ய விவசாயத்தில் 32 ஏக்கருக்கு தேவையான இடுப்பொருட்களை ஒரே ஒரு பசுமாட்டிலிருந்து பெறலாம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.
சராசரியாக 1 கிலோ ஒட்டு ரக அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், பாரம்பர்ய நெல் அரிசி முக்கால் கிலோ மட்டுமே போதுமானது. தவிரவும் ரசாயன உரத் தாக்குதலால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அதன் விளைச்சல் உற்பத்தி, இப்போது ஏக்கருக்கு 20 மூட்டையில் இருந்து 8 மூட்டையாக குறைந்திருகிறது. பாரம்பர்ய விவசாயத்தில், நாளாக நாளாக மண்ணின் வளம் பாதுகாக்கப்ப்டுவதோடு, விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. பாரம்பர்ய நெல்லை   மதிப்புக் கூட்டி விறபதன் மூலம் அதாவது நெல்லாக அல்லாமல் அரிசியாக, அவலாக மாற்றி விற்பதன் மூலம். விதை நெல்லாக மட்டுமே விற்பனைக்கு தருவதன் மூலம் இதை லாபமாகவும் மாற்றிக் காட்ட முடியும். ” என்கிறார் நெல் ஜெயராமன்.
இவர் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் `கிரியேட் – நமது நெல்லைக் காப்போம்’ என்கிற அமைப்பு  கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தமது பிரசாரத்தை செய்து, அந்தந்த மாநிலங்களின் பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்கும் அர்த்தமுள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறது.

நன்றி: பசுமை விகடன்

பாரம்பரிய நெல்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்


பாரம்பரிய நெல் ரகங்களில் பள்ளமான பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகம் சம்பா மோசனம். இதன் வயது நூற்றி அறுபது நாள். அதிகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் வருவதற்கு முன்பு, நெல் விதையைத் தெளித்துவிட்டு வந்தால் போதும். மழை பெய்யும்போது குறைந்த ஈரத்திலும் முளைத்துவிடும்.

 Courtesy: Hindu

எதையும் தாங்கும்
வறண்டு கிடக்கும் ஏரிகளில் இதைப் பயிர் செய்யலாம். பிறகு தண்ணீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்கப் பயிரின் உயரமும் அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் பயிர் அழுகாது. அதிகத் தண்ணீர் இருந்தாலும் நீருக்கு உள்ளேயே கதிர் வந்து முற்றி, அதிக மகசூல் கொடுக்கும். எல்லா நிலைகளையும் தாங்கி நின்று பலனைக் கொடுப்பதால், இதற்குச் சம்பா மோசனம் என்று பெயர் வந்துள்ளது.
`விதைப்போம், அறுப்போம்’
சம்பா மோசனம் மோட்டா ரகம். சிகப்பு அரிசி. ஏக்கருக்கு இருபத்தி இரண்டு முதல் இருபத்தி ஐந்து மூட்டை வரை கிடைக்கும். இதற்கு எந்த உரமும் போட வேண்டியதில்லை. பூச்சித் தாக்குதல் உட்பட எந்த நோயும் இந்தப் பயிரைத் தாக்காது. `விதைப்போம், அறுப்போம்’ என்னும் சொலவடைக்கு ஏற்ற நெல் ரகம் இது.
இதன் சாகுபடிக்காக எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு சால் உழவு செய்து தெளித்துவிட்டு வந்து, பிறகு அறுவடைக்குச் சென்றால் போதும். நம் முன்னோர் இந்த அரிசியை உண்டு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்துவந்தனர். இன்றும் பல்வேறு கிராமங்களில் சம்பா மோசனம் நெல் புழக்கத்தில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
சம்பா மோசனம் நெல் இயற்கையாகவே விளைவதால் நமக்குத் தேவையான புரதச் சத்துகள், தாது உப்புகள் இதில் அடங்கியுள்ளன. இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலிமையும் அதிகரிக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் இதை உண்டு வந்தால், சோர்வு நீங்கி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்துவிடும். சம்பா மோசனம் அரிசிச் சாப்பாட்டுக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, அவல், கஞ்சி, பலகாரங்கள் ஆகிய உணவு வகைகளுக்கும் ஏற்ற ரகம்.
ரிலையன்ஸ் ஜியோவில் பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை என்ன?

ரிலையன்ஸ் ஜியோவில் பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் நிலை என்ன?


ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தை மார்ச் 31-ந்தேதிக்கு பின் தொடர 5 கோடி பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களின்
 நிலை என்னவாகும்?

ஜியோ இலவச டேட்டா சேவையை பயன்படுத்தி வரும் 10 கோடி வாடிக்கையாளர்களில்
5 கோடி பேர் ஜியோ அறிமுகம் செய்துள்ள ஜியோ பிரைம் திட்டத்தில் ரூ.99 ரீசார்ஜ்
செய்து

 ஜியோ பிரைம் உறுப்பினர்களாகியுள்ளனர். ஜியோ நிர்ணயித்திருந்த இலக்கைவிட
50%க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் உறுப்பினராக
இணைந்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச சேவை மார்ச் 31ந்
தேதியுடன் நிறைவடைவதையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண
சேவைக்கு மாறுவதற்கு முன்பாக ரூ.99 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும்பொழுது
அடுத்த மார்ச்
31,2018 வரை ஜியோவின் சிறப்பு சலுகைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்த பின் ரூ.303 செலுத்தினால் அன்லிமிட்டெட்
வாய்ஸ்கால்களுடன் தினமும் 1 ஜிபி 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகிறது,
இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாமல்
ரூ.303 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களுடன் 28 நாட்களுக்கு
2.5 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

உலகின் மிக வேகமாக வளரும் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குகின்ற
இந்த நிறுவனத்திடம் தற்போது 10-10.5 கோடி பயனர்களை வைத்துள்ளது,
இதில் 30% பேர்இலவச டேட்டா சேவைக்காக ஜியோவை இரண்டாம் பட்சமாக
பயன்படுத்தி
வருகின்றனர். மீதமுள்ள 7 கோடி பேரில் மூன்றில் இரண்டு பங்கு ஜியோ
பிரைம் சேவையில் இணைந்து வருகின்றனர். வர்த்தக ரீதியில் முன்னணி
வகித்து வரும் ஜியோ மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும்
சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் அல்லது ஜியோ எண்ணிற்கு வேறு எந்த
ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் குறிப்பிட்ட காலம் அதாவது
ரீசார்ஜ் செய்யாமல் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் ஆக்டிவேட்
செய்யப்பட்டிருக்கும்.

ஜியோ ரீசார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகள் எதுவும் வேலை செய்யாது,
இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ், மற்றும்
எஸ்எம்எஸ் எதுவும் வேலை செய்யாது.

ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு
12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட்
செய்யப்பட்டிருக்கும். ரூ.99 அல்லாமல் மற்ற ரீசார்ஜ் செய்யாமல்
ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியாது. இதனால் குறைந்த பட்சம்
ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த
முடியும்.

Wednesday, 29 March 2017

நாட்டு முருங்கை: 70 சென்ட் நிலம் 120 மரங்கள் லாபம் ரூ.3 லட்சம்

இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்வது ‘லேட்டஸ்ட்’ தொழில்நுட்பமாக மாறி வருகிறது. விவசாயத்தில் ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்துகளை பயன் படுத்துவது வெகுவாக குறைந்து வருவது ஆரோக்கியமானது.முழுக்க முழுக்க இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயிர், செடி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளை வேளாண்மைத்துறை ஊக்குவித்து வருகிறது. இப்பயிர் வகைகள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருப்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது.
இந்த வரிசையில் திண்டுக்கல் மாவட் டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயி சடையாண்டி இயற்கை முறையில் ‘நாட்டு முருங்கை‘ சாகுபடி செய்து வளமான வருமானம் ஈட்டி வருகிறார்.
‘விண் பதியம்’ தொழில்நுட்பம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வலையபட்டியில் நாட்டு முருங்கை குச்சிகளை வாங்கி வளர்த்தார். அதிலிருந்து வரும் கிளைகளில் ‘விண் பதியம்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான நாற்றுகளை உற்பத்தி செய்கிறார். இதற்காக நன்கு வளர்ந்த முருங்கை கிளையின் தடிமனான தண்டுப்பகுதியின் தோலை 1 இஞ்ச் அளவில் வட்டமாக வெட்டி எடுக்கின்றனர்.
தோல் உரித்த தண்டுப்பகுதியை சுற்றிலும் பஞ்ச கவ்யம், அசோஸ் பைரில்லம், கந்தக சக்தி கொண்ட ஈயம், வேப்பம் புண்ணாக்கு, பதப் படுத்தப்பட்ட எரு ஆகியவற்றின் சம அளவிலான கலவையை கைப்பிடி எடுத்து தண்டுப்பகுதியை சுற்றிலும் வைத்து அதன் மீது பிளாஸ்டிக் கவரால் மேலும், கீழும் கட்டி விடுகின்றனர்.
Courtesy: Dinamalar

.
40 நாள் கழித்து தோல் உரிந்த தண்டுப்பகுதியில் வேர் துளிர் விட்டிருக்கும். அதை வெட்டி எடுத்து மண்புழு உரம் கலந்த பிளாஸ்டிக் பாக்கெட்களில் வைத்து 40 டிகிரி வெப்ப நிலையில் ‘சேம்பரில்’ பராமரிக்கின்றனர். பின் வெயிலில் 30 நாட்கள் வைத்து நாட்டு முருங்கை நாற்றுகளை தலா 35 ரூபாய்க்கு விற்கின்றனர்.
இத்தொழில்நுட்பத்தை 15 ஆண்டுகளாக கடைப் பிடித்து நாட்டு முருங்கை சாகுபடியில் வாட்டம் குறையாத லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்
லாபம் ரூ.3 லட்சம்
சடையாண்டி கூறியதாவது:
  • பள்ளப்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் நாட்டு முருங்கை சாகுபடி செய்கிறேன். தமிழகம் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் நாட்டு முருங்கை நாற்றுகளை அனுப்பி வருகிறேன்.
  • உதாரணமாக கொடைரோடு அருகே ராமராஜபுரம் விவசாயி பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் என்னிடம் வாங்கிய நாட்டு முருங்கை நாற்றுகளை 70 சென்ட் பரப்பளவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடவு செய்தார். இதற்காக அவரின் மொத்த செலவு அப்போது ஆறாயிரம் ரூபாய்.
  • நடவு செய்த 120வது நாளில் இருந்து காய்ப்புக்கு வந்து விட்டது. 70 சென்ட் நிலத்தில் 120 மரங்கள் உள்ளன. தற்போது முருங்கை சீசன் குறைவு. எனினும் 120 மரங்களிலும் சடைசடையாய் முருங்கை காய்த்துள்ளன.
  • ஒரு கிலோ முருங்கைக்காய் 30 ரூபாய். சீசன் நேரத்தில் விலை மும்மடங்காக உயரும். இந்த சீசனுக்கு மட்டும் 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு மூன்று காய்ப்பு எடுக்கலாம்.
  • கால்நடை எருவை பயன்படுத்தி முறையாக பராமரித்தால் 50 ஆண்டுகள் வரை முருங்கையில் தொடர்ந்து லாபம் எடுக்க முடியும்.
  • நெல், கரும்பை ஒப்பிடும்போது தண்ணீர் தேவை மிக மிகக் குறைவு.
  • கீரை, முருங்கைக்காய், முருங்கை விதைகளை பதப்படுத்தி பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர் என்றார்.
விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
  • நாட்டு முருங்கை சாகுபடியில் செலவு மிகக்குறைவு. லாபம் பல மடங்கு என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளோம்.
  • நாள் முழுக்க வயலில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. காலை, மாலை தலா 30 நிமிடங்கள் செலவிட்டால் போதும். பூமி வறண்டு விட்டால் மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரங்களுக்கு தேவையான அளவு கால்நடை எருவை உரமாக இட வேண்டும். முருங்கையில் இரும்பு சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
  • சைவ உணவில் முருங்கையை தவிர்க்க இயலாது என்பதாலும், இதன் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பண ‘நோட்டு’ எண்ண, ‘நாட்டு’ முருங்கை சாகுபடி ஏற்றது என்றார்.
– கா.சுப்பிரமணியன், மதுரை
நாட்டு முருங்கை தொழில்நுட்பம் குறித்து 09791374087 ல் கேட்கலாம்.
நன்றி: தினமலர்