ஜம்மு- காஷ்மீர்: பத்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் உள்ள ஹயத்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சி.ஆர்.பி.எஃப்., சிறப்பு நடவடிக்கைக்குழு மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ஆகிய மூன்று குழுக்களும் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
அப்போது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புப்படையினர் நெருங்கியபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பின்னர் அந்த இடத்தை சல்லடை போட்டு தேடிய பின்னர் தங்களது தேடுதல் வேட்டையை பாதுகாப்புப்படையினர் கைவிட்டனர்.
அப்போது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்புப்படையினர் நெருங்கியபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பின்னர் அந்த இடத்தை சல்லடை போட்டு தேடிய பின்னர் தங்களது தேடுதல் வேட்டையை பாதுகாப்புப்படையினர் கைவிட்டனர்.
No comments:
Post a Comment