தமிழகத்திற்கு மட்டும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு மட்டும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவனியாபுரம்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில், தமிழகத்திற்கு மட்டும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது.
நாடு முழுவதும் உள்ள சூழலுக்கு ஏற்றபடி பார்த்து தான் அதனை செய்ய முடியும். மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி, விவசாயத்துறை மந்திரி ஆகியோர் பேசி இது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். அவர் உட்கார சீட் இல்லாததால், போராட்டக்காரர்களுடன் சாலையில் அமர்ந்து பேசுகிறார்.
மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி இல்லை. நதிகளை இணைக்க முடியாது என்று கூறியவர் தான் ராகுல் காந்தி.
தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்த இவர்கள், எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள். மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினால் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
நெடுஞ்சாலைத்துறை மைல் கல்லில் இந்தி எழுத்துக்கள் எழுதுவதற்கு, 2004-ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு தான் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கு தி.மு.க. மட்டும் காரணம் அல்ல. அ.தி.மு.க.வும் 3 வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. 1965-ல் இருந்த சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு.
இதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும். இதற்கு 1990 முதல் இடம் கையகப்படுத்தப்பட்டு, 2006-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது ஆட்சியில் இருந்தது தி.மு.க. தான்.
கடந்த டிசம்பர் மாதம் வரை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை. அதன் பிறகு தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் விவகாரத்தில், உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் வரியை குறைக்க ஐ.ஆர்.டி.ஏ. மூலமாக பேசி வருகிறோம். நாளை (3-ந் தேதி)க்கு இறுதி முடிவு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில், தமிழகத்திற்கு மட்டும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது.
நாடு முழுவதும் உள்ள சூழலுக்கு ஏற்றபடி பார்த்து தான் அதனை செய்ய முடியும். மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி, விவசாயத்துறை மந்திரி ஆகியோர் பேசி இது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். அவர் உட்கார சீட் இல்லாததால், போராட்டக்காரர்களுடன் சாலையில் அமர்ந்து பேசுகிறார்.
மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி இல்லை. நதிகளை இணைக்க முடியாது என்று கூறியவர் தான் ராகுல் காந்தி.
தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்த இவர்கள், எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள். மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினால் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
நெடுஞ்சாலைத்துறை மைல் கல்லில் இந்தி எழுத்துக்கள் எழுதுவதற்கு, 2004-ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு தான் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கு தி.மு.க. மட்டும் காரணம் அல்ல. அ.தி.மு.க.வும் 3 வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. 1965-ல் இருந்த சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு.
இதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும். இதற்கு 1990 முதல் இடம் கையகப்படுத்தப்பட்டு, 2006-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது ஆட்சியில் இருந்தது தி.மு.க. தான்.
கடந்த டிசம்பர் மாதம் வரை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை. அதன் பிறகு தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் விவகாரத்தில், உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் வரியை குறைக்க ஐ.ஆர்.டி.ஏ. மூலமாக பேசி வருகிறோம். நாளை (3-ந் தேதி)க்கு இறுதி முடிவு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment