உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
அமெரிக்காவில் இருக்கும் பஸ்நெட் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.
ஹாலிவுட் துறையில் நுழைந்திருக்கும் பிரியங்கா சோப்ரா மிக குறுகிய காலத்தில் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் பஸ்நெட் இணையதளம் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாப் பாடகியும் நடிகையுமான பியான்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா பிடித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ‘குவான்டிகோ’ என்னும் ஆங்கில தொடரில் நடிக்க தொடங்கிய பின்பு ஹாலிவுட்டிலும் முன்னணி நடிகையானார்.
இதையடுத்து, ஹாலிவுட்டிலும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் உருவாகினர். இந்தாண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
இந்நிலையில் பஸ்நெட் இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா.
உலக அளவில் ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி , ஏம்மா வாட்சன் உள்ளிட்டோர் பிரியங்காவுக்கு பிந்தைய இடங்களையே பிடித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 6வது இடமும், லா லா லேண்ட் புகழ் எம்மா ஸ்டோன் 12 இடமும் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment