வருமான வரி சோதனையில் ரூ.89 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பணப்பட்டுவாடா மற்றும் மோதல் சம்பவங்கள் காரணமாக தேர்தல் களத்தில் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.
ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பணப்பட்டுவாடா மற்றும் மோதல் சம்பவங்கள் காரணமாக தேர்தல் களத்தில் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.
ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல், விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, எம்.எல்.ஏ.க்கள் விடுதி, சரத்குமார் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், ரூ.89 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 86 சதவீதம் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையில், ரூ.89 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 86 சதவீதம் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment