10 ரூபாய்க்கு மதிய உணவு: பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதி
புதுடெல்லி:
டெல்லியில் 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.
அந்த மாநகராட்சிகளில் அதிகாரத்தை கைப்பற்ற மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி வேட்பாளர் டெபாசிட்டை இழந்தார். இதனால் ஆம் ஆத்மியில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி மாநகராட்சிகளை கைப்பற்ற வாக்காளர்களை கவரும் வகையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
ஏழை- எளிய மக்களின் நலன் கருதி மதிய உணவு 10 ரூபாய்க்கு வழங்கப்படும். அது போல 500 சதுர அடியில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் ஏழைகளுக்கு வெளிப்படையான நிர்வாகம் நடத்தப்படும். எந்த பணியிலும் ஒளிவு மறைவு இருக்காது.
பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வரி கட்டுவது எளிமையாக்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிகையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment