சென்னை:
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
2013-ஆம் ஆண்டு விடுதலை நாள் அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக 2000-க்கும் மேற்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் பல கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளன.

எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது; ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று விரும்பும் பொது மக்கள் அதை வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
2013-ஆம் ஆண்டு விடுதலை நாள் அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக 2000-க்கும் மேற்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் பல கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளன.
எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது; ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று விரும்பும் பொது மக்கள் அதை வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment