டெல்லியில் இன்று முதல் குட்கா விற்பனைக்கு 1 வருடம் தடை: கெஜ்ரிவால் அரசு உத்தரவு
புதுடெல்லி:
டெல்லியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யுமாறு கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் குட்காவுக்கு தடை விதித்து டெல்லி மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது இந்த தடை உத்தரவை மேலும் ஒரு ஆண்டு நீடித்து கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தாலும் டெல்லியில் உள்ள பல சில்லரை விற்பனை கடைகளில் கிடைப்பதாகவும், ரகசியமாக புகையிலை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment