தமிழகம், கேரளாவில் தலைமை செயலாளர் பொறுப்பு வகிக்கும் உறவு பெண்கள்
கிரிஜா வைத்தியநாதன், நளினி நெட்டோ
திருவனந்தபுரம்:
தமிழகத்திற்கு கர்நாடகாவுடன் காவிரி பிரச்சனை, கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சனை, ஆந்திராவுடன் கண்டலேறு அணை பிரச்சனை என அண்டை மாநிலங்கள் அனைத்துடனும் தண்ணீருக்கு தகராறு இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காண அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை மத்திய அரசுக்கும், கோர்ட்டுக்கும் கொண்டு செல்வது இவர்களின் வேலையாகும்.
இதனால் இம்மாநில அதிகாரிகள் மட்டத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு.
இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளராக கடந்த டிசம்பர் மாதம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இவர், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.
1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பதவிக்கு வந்தவர். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். இப்போது தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கிரிஜா வைத்தியநாதனின் தந்தை எஸ். வெங்கிட்ட ரமணன். இவர் ரிசர்வ் பாங்க் கவர்னராக இருந்தவர். இவரது சகோதரி மகள் நளினி நெட்டோ. இவரும் 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவு அதிகாரி ஆவார்.
கேரளாவில் பணியாற்றிய இவர், நேர்மைக்கு பெயர் போனவர். கடந்த 1999-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்தபோது, போக்குவரத்து துறை மந்திரி நீலலோகிதாசன் இவரிடம் முறைகேடாக நடந்ததாக குற்றம் சாட்டினார். இதற்காக நீலலோகிதாசன் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
மேலும் கீழ்க்கோர்ட்டு அவருக்கு தண்டனையும் விதித்தது. அதனை எதிர்த்து நீலலோகிதாசன் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்து அங்கு குற்றமற்றவர் என்று விடுதலை ஆனார்.
அதன் பிறகு நளினி நெட்டோ பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார். சமீபத்தில் கேரள முதல்-மந்திரியின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை இவர், கேரள தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழக மற்றும் கேரள தலைமை செயலாளராக மாமா மகள், அத்தை மகள் என நெருங்கிய உறவுமுறை உள்ளவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேரள தலைமை செயலாளராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தீர்களா? என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர், சிரித்துக் கொண்டே நாங்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறோம் என்றார்.
இதைவிட இன்னொரு ஆச்சரியமும் இப்போது நிகழ்ந்துள்ளது. அது, ஆந்திர தலைமை செயலாளராக உள்ள சத்தியபிரகாஷ் தக்கர், கர்நாடக தலைமை செயலாளராக உள்ள சுபாஷ் சந்திர குந்தியா ஆகியோரும் கிரிஜா வைத்தியநாதனின் 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ஜ்மெட் ஆவார்கள்.
எங்களுடன் ஐ.ஏ.எஸ். முடித்தவர்களில் பெரும்பாலானோர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இது ஒரு இனிமையான உணர்வு என்று கிரிஜா வைத்தியநாதன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். முடித்து அண்டை மாநிலங்களின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள இவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் இணைந்து ஆலோசித்து உரிய தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தமிழகத்திற்கு கர்நாடகாவுடன் காவிரி பிரச்சனை, கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சனை, ஆந்திராவுடன் கண்டலேறு அணை பிரச்சனை என அண்டை மாநிலங்கள் அனைத்துடனும் தண்ணீருக்கு தகராறு இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காண அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை மத்திய அரசுக்கும், கோர்ட்டுக்கும் கொண்டு செல்வது இவர்களின் வேலையாகும்.
இதனால் இம்மாநில அதிகாரிகள் மட்டத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு.
இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளராக கடந்த டிசம்பர் மாதம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இவர், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.
1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பதவிக்கு வந்தவர். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். இப்போது தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கிரிஜா வைத்தியநாதனின் தந்தை எஸ். வெங்கிட்ட ரமணன். இவர் ரிசர்வ் பாங்க் கவர்னராக இருந்தவர். இவரது சகோதரி மகள் நளினி நெட்டோ. இவரும் 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவு அதிகாரி ஆவார்.
மேலும் கீழ்க்கோர்ட்டு அவருக்கு தண்டனையும் விதித்தது. அதனை எதிர்த்து நீலலோகிதாசன் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்து அங்கு குற்றமற்றவர் என்று விடுதலை ஆனார்.
அதன் பிறகு நளினி நெட்டோ பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார். சமீபத்தில் கேரள முதல்-மந்திரியின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை இவர், கேரள தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழக மற்றும் கேரள தலைமை செயலாளராக மாமா மகள், அத்தை மகள் என நெருங்கிய உறவுமுறை உள்ளவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேரள தலைமை செயலாளராக நளினி நெட்டோ நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தீர்களா? என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர், சிரித்துக் கொண்டே நாங்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறோம் என்றார்.
இதைவிட இன்னொரு ஆச்சரியமும் இப்போது நிகழ்ந்துள்ளது. அது, ஆந்திர தலைமை செயலாளராக உள்ள சத்தியபிரகாஷ் தக்கர், கர்நாடக தலைமை செயலாளராக உள்ள சுபாஷ் சந்திர குந்தியா ஆகியோரும் கிரிஜா வைத்தியநாதனின் 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ஜ்மெட் ஆவார்கள்.
எங்களுடன் ஐ.ஏ.எஸ். முடித்தவர்களில் பெரும்பாலானோர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இது ஒரு இனிமையான உணர்வு என்று கிரிஜா வைத்தியநாதன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். முடித்து அண்டை மாநிலங்களின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள இவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் இணைந்து ஆலோசித்து உரிய தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment