Saturday 20 May 2017

நீதிபதி கர்ணனின் சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஜனாதிபதி மாளிகையில் கர்ணனின் மகன் மனு

நீதிபதி கர்ணனின் சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: ஜனாதிபதி மாளிகையில் கர்ணனின் மகன் மனு

















புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனால் நீதிபதி கர்ணன் தலைமறைவாக உள்ளார். அத்துடன், தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜனாதிபதி மாளிகையில் அவரது மகன் இன்று மனு அளித்தார். 


பின்னர், அவர் கூறுகையில், ‘எந்த தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஜனாதிபதி ரத்து செய்ய வேண்டும். என் தந்தை சரணடையமாட்டார்’ என்றார்.

No comments: