Sunday 21 May 2017

முடிவெடுக்க தெரியாதவர் ரஜினி, போர் என்று கூறி போரடிக்காதீங்க..! முகத்தில் கரியைப்பூசிய நடிகை..!



நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் விவாதம் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மிகப் பெரிய சுயநலவாதி, அவரின் படங்கள் எப்போது ரிலீஸ் செய்யப்படுகிறதோ, அப்போது எல்லாம் ரசிகர்களை அழைத்து பேசுவதும், அரசியலுக்கு வருவது ஆண்டவனின் கையில் உள்ளது என்று கூறுவதும் வழக்கம்.ரஜினி எட்டு வருடங்களுக்கு பின்னர் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த சந்திப்பின்  போது நான் அரசியலுக்கு வருவது இறைவனின் கையில் உள்ளது என்று எப்போதும் பாடும் பழைய பல்லவியை பாடிவிட்டு சென்றுள்ளார்.
அதில் ஒரு முக்கிய கருத்தாக போர் வரும்வரை காத்திருங்கள் என்று கட்டளையும் இட்டுள்ளார். இந்த ஒற்றை வார்த்தை தமிழத்தில் வயதான நிலையில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இது குறித்து தங்கள் கருத்துக்களை கூறிவரும் நிலையில் வம்புக்கு பெயர்போன பிரபல நடிகை கஸ்தூரியும் தனது பங்குக்கு ரஜினிகாந்த் முகத்தில் கரியைப் பூசியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நல்ல அரசியல், தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும்.
வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி என கூறியுள்ளார்
மேலும், ‘போர்’ அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது எனவும் அக்கப்போர் பண்ணாதீங்க எனவும் கஸ்தூரி கூறியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவேன் என தற்போது கூறுவது காலதாமதமான செயல் எனவும் கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் ரஜினிகாந்த்க்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ஒரு நடிகையே இப்படி கருத்து வெளியிட்டு இருப்பது கோடம்பாக்கம் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments: