Tuesday 17 April 2018

தக்காளி கூட்டு செய்வது எப்படி






தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 2,
தேங்காய்த்துருவல் - 50 கிராம்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
சுரைக்காய் - 1 கப்,

கறிவேப்பிலை - சிறிது,
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பட்டை,
கிராம்பு - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

சுரைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி, இஞ்சி விழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், வெங்காயம், சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும். அரைத்த கலவை, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கூட்டு பதத்திற்கு வந்ததும் இறக்கி, கறிவேப்பிலையால் அலங்கரித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: பாசிப்பயறு, துவரம்பருப்பு, தட்டைப்பயறு, புடலங்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு, சௌசௌ, நீர்ப்பூசணிக்காயிலும் கூட்டு செய்யலாம்.




No comments: