Wednesday 25 April 2018

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்

















விருதுநகர்:

பேராசிரியை நிர்மலா தேவி கைதான நாள்முதல் அவரை கணவர் சரவண பாண்டியன் வந்து சந்திக்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவரது உறவினர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

திருமணமானது முதல் நிர்மலாதேவிக்கும், அவரது கணவர் சரவணபாண்டியனுக்கும் சுமூகமான உறவு இருந்தது இல்லை.

ரெயில்வே பொறியாளராக சென்னையில் பணியாற்றிய சரவணபாண்டியன், நிர்மலாதேவி செயல்களால் அதிருப்தி அடைந்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

அவர் ஊர் திரும்பிய பிறகும் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் விவாகரத்து செய்ய முயன்றபோது நிர்மலாதேவி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் சரவணபாண்டியன் அதனை கைவிட்டு விட்டார்.

இதற்கிடைய மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்த நிர்மலாதேவி கடந்த ஆண்டு திடீரென மாயமாகி விட்டார். ஒரு மாதமாக அவர் வீடு திரும்பாததால் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அப்போது நிர்மலாதேவி மும்பையில் உள்ள ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. அவரை உறவினர்கள் சமாதானம் செய்ததின் பேரில் ஊர் திரும்பினார். இருப்பினும் சரவண பாண்டியனுக்கும், அவருக்கும் மன ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால்தான் கடந்த மாதம் முதல்வாரம் விவாகரத்து கேட்டு அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரவண பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

No comments: