Sunday 11 June 2017

எதுவுமே நடக்காம… அது எப்படிய்யா..? என் வாயால சொல்வேன்? டி.ராஜேந்தர் கொடுத்த ‘நச்’



தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியலில் பெரும் குழப்பமும், சர்ச்சைகளும் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஏதோ வெற்றிடம்.. வெற்றிடம் என்கிறார்கள். அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
இந்த வெற்றிடத்தால பெரிய களேபரமே நடக்கிறது. அவர் தான் சரியா ஆள், இவர் தான் சரியான ஆள் என ஆளாளுக்கு வரிந்து கட்டி கொண்டு அரசியலில் பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அணி தேறுமா இல்ல அந்த அணி தேறுமா என ஆருடம் வேற பார்க்கிறார்களாம். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு ரசிகர்களை சந்திக்கிறேன்னு அவர் வேற அரசியல் பற்றி கருத்து தெரிவிக்க, பலர் எதிர்ப்பும், சிலர் ஆதவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கலாய்ப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெளியே வந்தால் தான் அந்த படம் குறித்து விமர்சனம் செய்யமுடியும். வெளிவராத படத்திற்கு நான் எப்படி விமர்சனம் செய்ய முடியும்…?
அதே போல, முதலில் கல்யாணம் நடக்க வேண்டும், பின் சாந்தி கல்யாணம், அதற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்த பின் அது ஆணா, பெண்ணா என தெரிந்த பிறகுதான் பெயர் வைக்க முடியும். எதுவுமே நடக்காமல் எப்படி பதிலளிப்பது என அவரது பாணியிலேயே நச்சுன்னு கூறியிருக்கிறார்.

No comments: