Friday 2 June 2017

அழகான பெண் ஊழியர்! விழுந்த தொழிலதிபர்! பயங்கர சிக்கலில் மாட்டினார்!



சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் டயர்களை விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது.
இங்கு வேலை செய்யும் இளம்பெண் மிகவும் அழகானவர். அவரது அழகில் விழுந்து விட்டார் அந்த நிறுவனத்தின் அதிபர். ஆனால் அந்த இளம்பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.
அவர் அடிக்கடி நிறுவனத்திற்கு வந்து இவரை பார்த்துள்ளார். அப்போது, தொழில் அதிபர் தனது காதலியை நோட்டமிடுவதை கவனித்தார். மேலும் தன்னிடம் தவறாக அந்த தொழிலதிபர் பழகி வருவதாக தனது காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனை வைத்து இருவரும் ஒரு திட்டம் போட்டுள்ளனர்.
அதன்படி அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரவலைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார் தொழில் அதிபர். மீண்டும் ஒரு முறை மற்றொரு இடத்தில் உல்லாசம் அனுபவித்தபோது, அதனை மறைந்திருந்த காதலன் வீடியோ எடுத்து விட்டார்.
அதனை வைத்து நிறுவன அதிபரை மிரட்டி ரூ. 50 லட்சம் பறித்து, காதலனும் காதலியும் கார், தங்க நகை என ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
பிறகு பணம் தீர்ந்த பிறகு மீண்டும் 50 லட்சம் கேட்டு இருவரும் மிரட்டியுள்ளனர். பணம் இல்லாததால் தொழில் அதிபர் காவல்துறையில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து போலீசார் காதலன், காதலி ஆகிய இருவரையும் கைது செய்து, 4 கார்கள் 50 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கியுள்ளது. நான் சிவப்பு மனிதன் படத்தில் வரும் கதை போல உண்மையிலேயே நடந்துள்ளது.

No comments: