Saturday 19 May 2018

தித்திப்பான தேங்காய் பால் பணியாரம்

தித்திப்பான தேங்காய் பால் பணியாரம்

















தேவையான பொருட்கள்

பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப், 
தேங்காய் - ஒன்று, 
பால் - ஒரு டம்ளர், 
ஏலக்காய் - சிறிதளவு
சர்க்கரை - கால் கப் 



செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். 

அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

நல்ல பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

குழந்தைகள் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடும். 

No comments: