Sunday, 18 February 2018

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

















கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். 

தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்சனைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

கர்ப்பக் காலத்தில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.

எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம். 



அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.

வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம். பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.

பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்சனை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம். கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும். எனவே அதிக உயரம் இல்லாத செருப்பை அணிவது நல்லது.

Friday, 2 February 2018

மனைவியை ஏமாற்றும் கணவன் - காரணம் என்ன?

மனைவியை ஏமாற்றும் கணவன் - காரணம் என்ன?

















திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாகும். இது சிலருக்கு நல்ல புரிதலுடன் நிரந்தர வாழ்வாகவும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைய கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. சந்தேகம், தவறான உறவு, மன ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இதற்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இங்கு கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.

1. வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியான பிரச்சனைகள் ஏற்படும் போது, அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பின் காரணமாக மன அமைதி குறைந்து நிம்மதி இழப்பார்கள். ஆண்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க முன் வராமல், தவிர்க்கவே நினைப்பார்கள். இது மனைவியுடனான நெருக்கத்தை குறைத்து, மற்றவர்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும். அது அவர்களுக்கு நிம்மதி தருவதாக இருந்தால், மனைவியை ஏமாற்றவும் செய்வார்கள்.

2. சிலருக்கு எதிலும் புதுமை காணும் எண்ணம் இருக்கும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை ஒரே மாதிரி செல்வது சலிப்பை ஏற்படுத்தும். இவர்கள் எளிதில் மற்ற பெண்களால் கவரப்பட்டுவிடுவார்கள்.

3. உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இது சிலருக்கு மனைவியுடன் திருப்தியை ஏற்படுத்தும். ஆனால், சிலர் புது வகை இன்பங்களை சோதிக்க மற்றவர்களை தேடுவார்கள். இது தவறு என அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் உடலுறவில் சிறந்தவர்களாக இருப்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவும் இது போல் செய்வார்கள்.

4. திருமணமான புதிதில் இருக்கும் அக்கறை, சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகள், வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்தல் மற்றும் வேலைப்பளுவின் காரணாமாக அவர்கள் நடுவில் அன்பில் சிறிது இடைவெளி ஏற்பட்டிருக்கும். அந்த சமயத்தில் ஆண்கள், அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.

5. கணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவிகள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என நினைப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது.

எரித்திரியா நாட்டில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை - அமலுக்கு வந்தது புதிய சட்டம்

எரித்திரியா நாட்டில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை - அமலுக்கு வந்தது புதிய சட்டம்

அஸ்மாரா:

இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது

இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #TwoWivesMandatory #Eritrea #tamilnews